Thursday, 5 March 2015

நற்றிணையில் தொன்மங்கள்

                                          நற்றிணையில் தொன்மங்கள்  

பல்லியின் ஒலியும் நம்பிக்கையும்

தமிழர்கள் காலங்காலமாக நம்பிக்கையில் அதிகமாக பற்றுள்ளவர்கள். அதனை நற்றிணையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, தலைவி தலைவனின் பிரிவால் பெருந்துயரடைகின்றாள். அதனைக் கண்டு தோழியும் வருந்துகிறாள். அதற்கு அவள் கையாளும் பல உத்திகளுள் பல்லியை வைத்து ஆறுதல் கூறி தேற்றுவதும் ஒன்று என்பர். காப்பியஞ் சேந்தனர் என்னும் புலவர்.

    தோழி, தலைவியை நோக்கி நாம் குறிப்பிட்ட இடங்களிலே இனிய சொல்லும் செயலுமே நற்குறிகளாக நிகழ்கின்றன. நெடிய சுவரிடத்தே இருக்கும் பல்லியும் நம்பக்கமாக அமைந்து நம்மைத் தெளிவிக்கின்றது என்பாள்.

        இடுஉ ஊங்கண் இனிய படூஉம்
        நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும் (நற்றிணை 246)

    மேற்கண்ட பாடலின் மூலம் பல்லி நெடுஞ்சுவரில் தங்கி இருப்பதும், இனிய குறிகளாக அதன் ஒலிகள் தோன்றுகின்றன என்றும் தோழி கூறுவதைக் காணமுடிகின்றது.

விழாவும் குயவன் ஊருக்கு அறிவித்தலும் - தோழிக்கூற்று

    விழா ஊரில் நடைபெறுவதை மக்களுக்குக் கூறுபவர்களாக குயவர்கள் இருந்துள்ளார்கள். இத்தகைய குயவரிடம் தோழி பேசியுள்ளார் என்று கூடலூர் பல்கண்ணனார் நற்றிணை 200வது பாடலில் தமிழர்களின் செயற்பாடுகளை பதிவுசெய்துள்ளனர். தலைவனைப் பிரிந்த தலைவி, வருத்தத்தினால் காத்திருக்கிறாள். தலைவனோ பரத்தையிடம் இடம் சென்று உறவை நாடி இன்புற்றான். பின்னர் வெறுப்பு ஏற்பட்டது. தலைவி நம்மை எப்படி சேர்த்துக் கொள்வாள் என்று அச்சப்பட்டு பாணனைத் தூது அனுப்புகிறான். பாணனைக் கண்டதும் தலைவியின் உள்ளம் நெகிழ்ந்தது, இதைக் கண்ட தோழி, விழாவினை அறிவிப்போனாக வந்த குயவனிடம் பேசுவாள் போல பாணனுக்கு மறுப்புக் கூறுகின்றாள்.

        கண்ணி கட்டிய கதிர அன்ன
        ஒண்குரல் நொச்சித் தெரியல்குடி
        யாறு கிடந்தன்ன அகல்நெடுந்தெருவில்
        சாறு என நுவலும் முதுவாய்க் குயவ
        ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ. (நற்றிணை. 200)

    இருபுறமும் அரும்பிட்டுக் கட்டிய ஒரு குதிரைப் போன்ற ஒள்ளிய கொத்தினைக் கொண்ட நொச்சியது மாலையைச் சூடிக் கொண்டு, ஆறு குறுக்கிட்டு இருந்தாற் போல அகன்ற நெடிய தெருவினிலே வந்துள்ளவனே! இற்றை நாளில் இவ்வூரிடத்தே திருவிழா நடைபெறா நின்றது – எனக் கூறும் அறிவு முதிர்ச்சிகொண்ட குயவனே! நீ செல்லும் இடங்களில் இதனையும் அந்த இடங்களில் உள்ளோர்க்குச் சொல்லிச் செல்க என்பாள் தோழி. மேற்கண்ட சான்றின் மூலம் குயவர் ஊர்விழாவைக் கூறுவதையும், அவர்களிடம் தோழி பேசுவதையும் காணமுடிகின்றது.

கொல்லிப்பாவையின் அழகும் காத்தலும் - தலைவியும்

    தலைவன், தலைவியைக் கண்டு காதலுற்றான். அவளை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினான். அதனைக் கேட்ட பாணன், அவள் குறவனின் அன்புக்குரிய இளமகள் அவள். அவளை நீ பெறுவது அரிது என்றான், மேலும், நீ நெருங்க முடியாத அளவுக்கு பெருங்காவலை உடையவள் என்றும் கூறினான். உன் சொல்லைக் கேட்டு நடக்கும் அளவுக்கு முதிர்ச்சியடையாத சிற்றிளம் பருவத்தையுடையவள், அத்தகையவளை காமுற்று அடைவதற்கு நினைத்தல் பொருந்தாது என்றான்.

    இதற்கு மறுமொழி கூறிய தலைவன், வேர்பலா மரங்களையுடையது கொல்லிமலை. அதனை தெய்வம் காவல் காத்து வருகின்றது. நெடிய கோட்டினின்றும் விழும் வெள்ளிய அருவியினது மேற்குப் பக்கத்தில் பாறையிடத்தில் உள்ளது கொல்லிப்பாவை. காற்று மோதி இடித்தாலும் மிகுதியான மழைத்துளிகள் விழுந்தாலும், இடிகள் சிதைந்து உருமித் தாக்கினாலும், இத்தகைய பல இயற்கையினாலான ஊறுகள் வந்தாலும் பாதிப்பு ஏற்படாது. இந்த பெருநிலமே நிலநடுக்கம் ஏற்பட்டாலும் காப்பாற்றும் கொல்லிப்பாவை. ஏனென்றால் தான் கொண்டுள்ள, கண்டாரைக் கவர்கின்ற தன் உருவப் பேரழகினின்றும் என்றும் அழியாதிருக்கின்ற நிலைத்த தன்மைக் கொண்டது அக்கொல்லிப்பாவை. எனவே, பாங்கனே நீ என்ன கூறினாலும், தலைவியின் அழகும், அதனால் என் பாதுகாப்பும் கொல்லிப்பாவையைக் கண்டதுபோல் உள்ளது என்ற தன் உள்ளக் கருத்தைக் கூறுகின்றான். கொல்லிப் பாவை நிலத்தையும் வளத்தையும் காப்பதுமட்டுமின்றி பேரழகாக இருந்ததை தமிழரின் தொன்மத்தை இச்சான்றுகள் மூலம் உணரலாம்.

        மாலயுறை குறவன் காதல் மடமகள்
       பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள்
        சொல்லெதிர் கொள்ளா இளையள் அனையள்
        உள்ளல் கூடாதென்போய் - மற்றும்
        செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்
        தெய்வம் காக்கும் தீதுதீர் நெடுங்கோட்டு (நற்றிணை – 201)





நற்றிணையில் தொன்மங்களும் மகளிரும்
உடன்போக்கும் கார்த்திகைத் திங்களும்

    தமிழ் மக்களிடையே கார்த்திகை மாதங்களில் தீபவழிபாடு செய்வது நற்றிணை 202ம் பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைவன் தலைவியுடன் உடன்போயினன், அப்பொழுது தலைவிக்கு துன்பம் தவிர்க்க சில சான்றுகளைக் கூறி அவளுக்கு மகிழ்வையும் ஊட்டுகின்றான். இந்த உரையாடலில் கார்த்திகை மீன் பொருந்தியதும் அறம் செய்வதற்கு அமைந்ததுமான கார்த்திகைத் திங்களில், வரிசையாகச் செல்லுகின்ற நெடுவிளக்குகளின் ஒழுங்கைப் போலப் பலவான பூக்களைக் கொண்ட கோங்க மரங்களாலே அழகு பெற்று விளங்கும் காட்டையும் காண்பாயாக என்றான் தலைவன்.

        அறுமீன் கெழிஇய அறம்செய் திங்கட்
        செல்சுடர் நெடுங்கொடி போலப்
        பல்பூங் கோங்கம் அணிந்த காடே (நற்றிணை 202)

மேற்கண்ட சான்றின் வழி அறம் செய்வதற்குரிய மாதமாக கார்த்திகையும், திங்களின் முக்கியத்தையும் தமிழர்களின் தொன்மைகளாக உள்ளதைக் காணலாம்.

நற்றிணைக் காட்டும் தொன்மங்களில் பெண்கள்

    எட்டுத் தொகை நூல்களுள் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெற்ற நூல் நற்றிணையும் ஒன்றாகும். இதில் தமிழக வரலாறும், பண்பாடும் தொன்மங்களும் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக தொன்மங்களுள் மகளிர் தொடர்பானவற்றை ஆராயும் நோக்கில் இவ்வாய்வு காண முற்படுகின்றது.

உருகெழு தெய்வம் மறைந்திருக்காது

    தலைவன் களவொழுக்கத்தினையை நாடி வருதலினை விரும்புகின்றான். முறையாக மணந்து கொள்ள வேண்டும் என்பதில் நாட்டமில்லாமல் இருக்கின்றான். பகற்குறி நாடி வந்த அவனிடம் தோழி சில கருத்துக்களைக் கூறுவதாக உலோச்சனார் நற்றிணை 398 ஆம் பாடலில் கூறுகின்றார்.

    அச்சம் பொருந்திய தெய்வமும் மறைந்திருக்காமல் நடமாடிய படியிருக்கும். விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் மேலைத் திசைக்குச் சென்று மறையும். ஆனால் நீயோ, ஒளிந்து ஒளிந்து தலைவியைச் சந்தித்து நலம் பெறுவது பொறுக்காமல் தலைவி அழுது கொண்டிருக்கிறாள். எனவே, நீயே தலைவிக்கு ஏற்பன கூறி ஆற்றுவித்துப் போவாயாக என்ற தலைவனுக்குத் தோழி கூறுவள். இதன் மூலம் தெய்வம் நேரடியாக நடமாடும் என்னும் கருத்துடைய நம் தொன்மையை உணரலாம். இதனையும் தோழி என்னும் பெண் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது.

        உருகெழு தெய்வமும் கரந்துறை யின்றே
        விரிகதிர் ஞாயிறும் குடக்குவாங் கும்மே
        பாணர் இளமுலை நனைய
        மாணெழில் மலர்க்கண் தெண்பனிக் கொளவே (நற். 398)

கண்ணெதிரே காணும் கடவுள்

    தோழி – தலைவனுக்கு தலைவியைப் பற்றி சிறப்பாகக் கூறுவாள். தலைவி, எமக்கெல்லாம் கண்ணெதிரே காண்கின்றதற்குரிய ஒரு கடவுள் போல்வானும் ஆவாள் என்று தோழி தலைவியைப் பாராட்டி தலைவனுக்குக் கூறுவாள். நீ வந்து அவளை சந்திக்க முயல்கின்றாய். நான் உன் கருத்தை தலைவிக்குக் கூறுவேன் என்பள் தோழி.

    குறிப்பாக படர்ந்து செல்லும் மிளகினது வளமான செழித்த கொடியானது, தூங்கிக் கொண்டிருக்கும் புலியினது கோடுகள் அமைந்த மேற்புறத்தைத் தடவிவிடும் என்ற கருத்தைக் கூறுவாள். புலியைத் தொட பலரும் பயப்பட மிளகின் கொடி தொடுவதைப் போல தலைவி தெய்வம் போன்று இருந்தாலும் உன்னாலும் முடியும் என்று நம்பிக்கையூட்டும் இறைத்தொன்மத்தைக் குறித்துக் கூறும் போக்கைக் காணலாம்.

        எம்பதற் தெளியள் அல்லள் எமக்கோர்
        கட்காண் கடவுள் அல்லலோ – பெரும
        ஆய்கோல் மிளகின் அமலையம் கொழுங்கொடி
        துஞ்சுபுலி வலிப்புறம் தைவரும் (நற்றிணை. 234)

வெறியாட்டு

    தமிழ் குடும்பங்களிலே மகளிர்க்கு நோய் வந்தால் வெறியாட்டு செய்வது வழக்கம். குறிப்பாக தலைவிக்கு தலைவன் மீது காதல், பலபடியாக தலைவன் மீது தலைவி காதல் கொண்டாள். ஆனால் தலைவனோ தலைவியைப் போன்று ஆழமாகக் காதல் கொள்ளவில்லையே என்று தோழி வருந்திக் கூறுகிறாள் என்ற நற்றிணை 268ம் பாடலில் வெறியாடியக் காமக்கண்ணியார் என்னும் புலவர் கூறுகின்றார்.

    தோழி முற்றத்தில் புதுமணலைப் பெய்து விளக்கம் செய்து, கழங்கினாலே மெய்ம்மை தேர்ந்து கூறுவோனாகிய வேலனையும் வருவித்து, வெறியாடற்கும் அன்னை ஏற்பாடு செய்தனள். மணங்கமழும் தேன் அடைக்கும் வேண்டியளவு தேன் ஊறிக் கொண்டிருக்கின்ற நாடனான நம் தலைவன். அவன் மீது ஆராக் காதல் கொண்டு நோய் ஏற்பட்ட தலைவி போன்று தலைவன் நோயால் பாதிக்கப்படவில்லையே. அதற்குரிய காரணம்தான் என்ன? இதனை வேலனிடம் கேட்போமா? என்பதாக தோழி கூறுகின்றாள்.

        பெய்ம்மணல் முற்றங் கடிகொண்டு
         மெய்ம்மலி கழங்கின் வேலன் தந்தே
         காதல் செய்தலுங் காதலம் அன்மை
        யாதனிற் கொல்லோ? தோழி – வினவுகம் (நற்றியை. 268)
    மேற்கண்டவற்றின் மூலம் வேலன் வெறியாட்டின் மூலம் புதுமணலைக் கொண்டு செய்யும் பழமை முறையையும், கழங்கை வைத்து உண்மை அறியும் முறையையும் அதுவும் மகளரிர்க்காக மகளிர் செய்யும் தொன்மையையும் உணரலாம்.

துடி, பறை முதலிய வாச்சியங்கள் முழங்கல்

    களவு ஒழுக்கத்தைக் கைவிட்டுத் தலைவன் தலைவியை மணந்து கொள்ளுமாறு விரைவுபடுத்த வேண்டுமென்று கருதுகின்றாள் தலைவியின் தோழி. இதனை நற்றிணை 322 வது பாடலில் மதுரைப் பாடலாசிரியன் சேந்தன் கொற்றனார் கூறுகிறார். குறிப்பாக தலைவனின் தண்மை கமழுகின்ற பரந்த மார்பினைத் தனக்கே உரிமையுடையதாக நீயும் பெறவில்லை. அதனால் நின் அழகிய நுதலிடத்தே பசலையும் படர்ந்தது. பிறரால் தீர்க்க முடியாத உன் காமநோயை அணங்கு தாக்கு இது என்ற அன்னை அறியும்படி வேலன் கூறுவான். இனிய வாச்சியம் பலவும் ஒலிக்கப் பாடியபடியே பலவாகிய பூக்களைத் தூவியும் முருகனைத் துதிப்பான். இவ்யாட்டினைப் பலியாக ஏற்றுக் கொள்வாயாக என்று கூறி, அதனை அறுத்துப் பலியும் கொடுப்பான். அவ்வாறு செய்யவும் நின் நோயும் தணிவதாயினால் எவ்விடத்தும் இதனிலும் கொடியதான செயலும் பிறிதொன்றும் இல்லை கண்டாய்! அதுதான் உண்மையாமோ? என்றாள்.

        ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும்
        இதனிற் கொடியது பிறிதொன் றில்லை
        தன்கமழ் வியன்மார்பு உரிதினிற் பெறாது
        நன்னுதற் பசந்த படர்மலி அருநோய்
        அணங்கென உணரக் கூறி வேலன்
        இன்னியங் கறங்கப் பாடிப்
        பன்மலர் சிதறியர் பரவுறு பலிக்கே (நற்றிணை 322)

    மேற்கண்டவற்றின் மூலம், தலைவிக்கு வெறியாட்டு செய்வதனாற் தீரும் என்பது கொடுமை என்று கூறுவதையும், இனிய ஓசைகளை எழுப்புவதையும், பாடல் பாடி பல பூக்களைக் கொண்டு பலியிடலும் அறிய முடிகின்றது.

துயருற்ற நெஞ்சத்துடன் தெய்வத்தைப் பேணி வருந்தாதே

    தலைவி களவுக் காலத்தே தலைவனுடன் பழகினாள். பின் தனிமையால் வருந்திப் பசலை நோயுற்றாள். அதனைக் கண்ட தாய் அவள் நிலையறியாது வெறியாட்டு நிகழ்த்த ஏற்பாடு செய்கிறாள். இதனை தடுக்க முற்படுகிறாள் தோழி. அதற்கு அவள் கூறும் கருத்துகளை நற்றிணை 351 – ல் மதுரைக் கண்ணத்தனார் எனும் புலவர் அழகாகக் கூறுகின்றார்.

    அன்னையே நான் சொல்வதைக் கேள். இவள் தன்னுடைய பெதும்பைப் பருவமாகிய இளமையிற் கழிந்துவிட்டனள் என்று நினைத்து, நம் வீட்டில் வைத்து காவலுக்கு உட்படுத்தினாய். இருப்பினும் தலைவி தன் பழைய சிறப்பழகை அயைவில்லை. ஏனென்றால் பசலை நோய்தான் காரணம் என்பதை தாய்

தோழி தலைவனுக்கு அறிவுரை – குழந்தையும் பேயும்



தோழி தலைவனுக்கு அறிவுரைகுழந்தையும் பேயும்







     தோழி தலைவனை விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். தாமரை மலர்போலும் தலைவியின் புதுநலத்தை உண்டு நின்னாற் கூடி ,ன்புற்றாள். நானும் அப்பொழுது ,ல்லை. எம்மிடமும், தலைவியிடமும் வளர்ந்து வந்ததான நாணத்தையும் யாம் உன்னால் கைவிட்டோம். இனி இவ்வூரிடத்தே அலரும் எழட்டும் என்றாள். ,தனை, குற்றமற்ற கற்பினையுடைய இளையாள் ஒருத்தி தன் குழந்தையைப் பேயானது வலிந்து எடுத்துக் கொள்ள, அதனை மீட்கமுடியாமல் கைவிட்டதைப் போன்றுள்ளது. எங்களின் நிலைமை என்று தோழி தலைவியின் துன்பத்தை தலைவனுக்குக் கூறுகின்றாள்

                                பூவின் அன்ன சலம்புதிது உண்டு
                                நீபுணர்ந்த தனையேம் அன்ன மயின்
                                மாசில் கற்பின் மடவோள் குழவி
                                பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு
                                சேணும் எம்மொடு வந்த
                                நாணும் விட்டோம் அலர்க விவ்வூரே (நற்றிணை – 15)


மதயானை நிரம்பிய வழி

                தலைவி, தலைவனின் பிரிவை நினைத்து வாழ மெலிவுற்றாள். அந்த மெலிவைப் போக்குவதற்குக் கருதும் அவள் தலைவனது வீரத்தைக் கூறுவள். மிகப் பெரிய பாசறையைக் கலக்கிய மதங்கொண்ட போர்க்களிறு, பிறர் தடுப்பதற்கு அரிதான மறத்தன்மையுடைய அதனது ஒற்றைக் கொம்பைப் போல ஒன்றாக விளங்கிய அருவியை உடைய குன்றத்தைக் கடந்து சென்றவர் நம் தலைவன். அவனும் உன் துன்பம் போகுமாறு உன்னைத் தேடி வருவன் கலங்காதே என்று அறிவுரை கூறினள்.

                                கடாஅம் கழி, கதன்அடங்கு யானைத்
                                தடாஅநிலை ஒரு கோட்டன்ன
                                ஒன்றிலங்கு அருவிய குன்றிறந் தோரே
                                பருவரல் நெஞ்சமொடு பல்படர் அகல
                                வருவர் வாழி தோழி (நற்றிணை – 18)

தோழியின் தலைவிக்கு சேரமான் வரலாறும் பல் பதித்த கதவும்

                தோழி தலைவிக்கு ஆறுதலும் - தேறுதலும் கூறி பிரிவுத் துயரைப் போக்கினாள் - அப்பொழுது சேரமான் வரலாற்றைக் கூறினாள். மூவன் என்பானின் முள்போன்ற பற்களைப் பறித்துக் கொணர்ந்து அழுத்திவைத்த கதவினையுடையது தொண்டிப்பட்டினம். அதற்கு அரசன் சேரமான். அவனுடைய பாசறையில் வீரர்கள் உறங்காமல் கலங்கியிருந்தனர். காரணம் வெற்றி என்ற சிந்தனையில் உறக்கம் வராது என்ற கூறினள். அதைப் போன்று உன் தலைவனும் செயலில் மூழ்கி வெற்றி பெறுவான். எனவே கண் கலங்காதே என்று தலைவிக்கு அறிவுரை கூறுவாள் 
.
                                முழுவலி முள்எயிறு அழுத்திய கதவின்
                                கானல்அம் தொண்டிப் பொருநன், வென்வேல்
                                தெறல்அருந்த தானைப் பொறையன் பாசறை
                                நெஞ்சம் நடுக்குறூம் துஞ்சா மறவர் (நற்றிணை – 18)

சில நாள் வாழாள் (தோழிதலைவன்)

                தலைவன் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தினான். தோழி தலைவனை சந்தித்து விரைவிலே திருமணம் செய்து கொள்க என்றாள். மேலும், தலைவா, நீயும் நின் ஊர்க்குப் போகா நின்றனை. நீ மீண்டும் வருவதாகிய ,டைப்பட்ட அந்தச் சில நாட்களளவும், நின் தலைவி, நின்னைப் பிரிந்த துயரத்திற்கு ஆற்றாது உயிர் வாழ மாட்டாள். எனவே, உடனடியாக வந்து தலைவியைத் திருமணம் செய்க என்றாள்.

                                செலீ, சேறீ ஆயின், ,வளே
                                வருவை ஆகிய சில்நாள்
                                வாழாள் ஆதல்நற்கு அறிந்தனை சென்மே (நற்றிணை – 19

விரதமுடையாரும் தலைவியின் நிலையும் (தோழிதலைவிக்கு)

                நோன்புடையவள் தம் கையிடத்தே உணவைப் பெற்று உண்பதற்கு குந்தி ,ருந்தால் போல உன் தன்மையும் ஆகும் என்பாள் தோழி. விரத தன்மையுடைய துறவிகள் தம் கையால் பெறும் பிச்சையினை மட்டுமே உண்டு, தம் நினைவை ஆன்ம உயர்வுக்குள் செலுத்துவர். அதுபோலத் தான் தலைவியே நீ காத்திருத்தல் தலைவனுடன் சேர்ந்து ,ன்புறவே என்று அறிவுரை கூறுகின்றாள்.

                                வான்பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்
                                கைஊண் ,ருக்கையின் தோன்றும் நாடன் (நற்றிணை – 22)

திணை கவர்தலும் குரங்குகள் உணவு உண்ணுதலும்

                தலைவியே, மலைப்பக்கத்திலுள்ள பசிய தினைப் பயிரைக் குன்றத்துக் கொடிச்சியர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பர். அங்கே, முற்றிய பெரிய கதிரொன்றை, ஒரு மந்தியானது கவர்ந்து கொண்டது. பாய்வதைத் தவிர வேறெதுவும் தெரியாத கடுவனொடு நல்ல மலைமீது எறிக் கொண்டது. தன் உள்ளங்கை நிறையுமளவுக்குத் தினையைக் கசக்கி உண்டது. ,தே போல நம் தலைவனும் பொருள் கொணர்ந்து உன்னை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்வைத் தருவான் கவலைப்படாதே என்று அறிவுரை கூறுவள் தோழி,

                                கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்திணை
                                முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி
                                கல்லாக் கடுவனொடு நல்வரை ஏறி
                                அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு (நற்றிணை – 22)

வாடிய கோடைப்பயிரும் இரவு மழையும்

                வாடிய பயிர்களுக்கும், நீர் வற்றிப் போன குளங்களுக்கும் ஈரமற்றுப் போன கோடைக் காலத்தே இரவின் நடுயாமத்தில் மழை பெய்தாற் போல நம் வெம்மை தீர்க்க நம்பால் வந்தனன் என்ற தலைவியிடம் தோழி, தலைவன் வரவைக் கூறுகின்றாள். அறிவுரை கூறும்போதும் காய்ந்த பகுதிக்கும் மழைக்குமுள்ள தொடர்பைக் கூறுவதைக் காணலாம்.

                                கயம்கண் அற்ற பைதுஅறு காலைப்
                                பீளொடு திரங்கிய நெல்லிற்கு
                                நள்ளென் யாமத்து தழைபொழிந்த தாங்கே (நற்றிணை – 22)

உடல் மாற்றமும் காமம் ஒளிப்பும்

                தலைவி களவுறவிலே நீட்டிப்பது கண்டு ஆற்றாமை மிகுகின்றது. அதனைக் கண்ட தோழி தலைவனுக்கு தலைவியின் துன்பங்களைக் கூறி காலம் நீட்டிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறுகின்றாள். தலைவியின் தோள்கள், வளைகள் கழன்று விழுமளவுக்கு மெலிந்தன. ஆயத்தாரோடும் விளையாட்டு அயர்கின்றாள். இதனால் மேனியில் களைப்பு தோன்றுகின்றது. ,தனால் வருந்துகின்றாள். அழகும் தொலைகின்றது.இனி காமத்தை மறைக்க என்ன செய்வாளோ? என்று தன் கருத்தைப் புரிய வைக்கின்றாள்;.

                                தோடிபழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே
                                வடிக்கொள் கூழை ஆயமொடு ஆடலின்
                                டிப்பு மெய்யது ஒன்று உடைத்தே
                                கண்ணே காமம் கரப்பு அரியவ்வே (நற்றிணை – 23)


அன்னை காத்த உடல் அழகு

                தோழி தலைவனுக்கு அறிவுரை கூறும்போது தலைவி தன் தாயை நினைத்து வருந்துகின்றாள். குறிப்பாக கடினப்பட்டு வளர்த்த தாய், அதனால் உண்டான அழகு சிதைந்து போகின்றதே என்று தலைவி வருந்துவதாக தோழி கூறுகின்றாள்.

                                அன்னை காக்கும் தொல்நலம் சிதையக்
                                காண்தொறும் கலுழ்தல் அன்றியும். (நற்றிணை -23)

                தலைவியே நேற்றைய பொழுதிலே நம்மோடுங் கூடியிருந்து தினைப்பயிரிடத்தே கிளிகளைக் கடிந்தவனாகத் தங்கியிருந்தான் தலைவன். தன் குறையினைச் சொல்லுதற்கேற்ற இடவாய்ப்பினைப் பெறாதவனாகி, அவ்விடம் விட்டு அகன்றான். அதனால் நமக்குத் துன்பமுமில்லை. தேனை உண்ணும் வண்டுபோன்றவன். அவனது கெடாத அந்த காட்சியைக் கண்டும் என் தொடிகள் கழன்றன. அதனை மீண்டும் செறித்துக் கொண்ட எனது பண்பற்ற செய்தி என்னை விடாத ஒரு நினைப்பாகவே ,ருக்கின்றது என்றாள். அவன் அழகிலும், பண்பிலும் மயங்கிய தோழி, தன் காலில் தொடிகள் கழன்றது என்றும் அதனை மீண்டும் சரிசெய்ததைக் கூறி தலைவிக்கு தலைவன்பால் மேலும் பற்றுண்டாகுமாறு பேசுவதைக் காணலாம்.

                                வளமலை நாடன் நெருநல் நம்மொடு
                                கிளைமலி சிறுதினைக் கிளிகடிந்து அசை,ச்
                                சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்து
                                அல்லல் அன்றது காதலம் தோழி
                                வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி
                                கண்டும் கழல்தொடி வலித்தவென்
                                பண்பில் செய்தி நினைப்பாகின்றே (நற்றிணை – 25)

தோழிதலைவனுக்கு தோழி வருத்தமும் - நெல்லின் தாய்மனையும்

                தோழி தலைவனின் பிரிவையும், அதைத் தாங்கமுடியாதத் துன்பத்தை உடையவளாகத் தலைவி இருப்பதையும் கூறுகின்றாள். அடுக்கிய நிலையமைந்த நெடிய நெடுகூடுகளிலே நிறைந்திருக்கும் நெல்லைக் கொண்டது ,வளது தாய்மனை. அதனைக் கைவிட்டு வாடிப்போன பலாமரங்களைக் கொண்ட வழியில் வந்து உன்னுடன் நட்பு கொண்டனள். கூர்மையான பற்களும், பொன் பொதிந்தாற் போன்ற தேமற் புள்ளிகளையும், நெருங்கிய கருமையான கூந்தலையும் பெருத்த தோள்களையும் உடையானாகிய இவளுக்கு நும் பிரிவைக் கேட்டதுமே வளைகள் நெகிழ்ந்தன. நும்மோடு சேர்ந்த கெடுதுணையான தன் தவறினாலே ,வள் துன்பப்படுவதை எண்ணி வருந்துகின்றேன் என்றாள். தலைவன் பிரிவைத் தடுக்க தலைவியின் வசதியான வாழ்க்கையைக் கூறி தடுக்கிறதைக் காணலாம்.

             நோகே யானே நெகிழ்ந்தன வளையே
             பிண்ட நெல்லின் தாய்மனை ஒழியச்
             முடமுதிர் பலவின் அத்தம் நும்மொட
             கெடுதுணை ஆகிய தவறோ (நற்றிணை – 26)

தோழிதலைவனுக்கு பூக்களை பறிக்க அன்னை கூறவில்லை

                கானல் சோலையிடத்தே விளையாட்டயர்ந்தோம் பிறரை மறைத்தபடி களவாக எதுவும் செய்யவில்லை. பிறரும் அறிந்து வைக்கவுமில்லை. நெய்தல் நம் கண்களைப் போன்று பூத்திருக்கும். அதனை பறித்து வாருங்கள் என்று அன்னை கூறவில்லை. அதனால் என்ன நினைத்தாளோ அன்னை என்று தலைவன் காதில்படும்படி கூறினாள் தோழி.

                                கழிசூழ் கானல் ஆடியது அன்றிக்
                                கரந்துநாம் செய்தது ஒன்ற ,ல்லை உண்டு எனின்
                                பரந்துபிறர் அறிந்தன்றும் ,லரே நன்றும்
                                எவன் குறித்தனள் கொல் அன்னை
                                கண்போல் பூத்தமை கண்டு நுண்பல
                                சிறுபா கடைய நெய்தல் (நற்றிணை – 27)

தோழிதலைவிக்கு அன்னையும் கள்வரும்

                தலைவன் முன்னர் தலையளி செய்தபோது கைகளைக் கொண்டு தன் கண்களிலே ஒற்றிக் கொண்டும், தன் கைகளாலே உன் நறிய நெற்றியைத் தடவி விட்டும் அன்னை போல அன்பான சொற்களைக் கூறுவான். ,ப்பொழுதோ வஞ்சத்தால் பிறர் பொருளைக் கவர்ந்து சென்று, அவரைப் பற்றி நினையாத கள்வரைப் போல கொடுந்தன்மையின் ஆயினன் என்றுதலைவிக்குத் தோழி கூறுவாள். எதிர்மறையாக தலைவனைக் கூற தலைவி மறுத்து ஆற்றியிருப்பாள் என்றும் கூறலாம்.

                                என்கைக் கொண்டு தன்கண் ஒற்றியும்
                                தன்கைக் கொண்டுஎன் நண்ணுதல் நீவாயும்
                                அன்னை போல் ,னிய கூறியும்
                                கள்வர் போலக் கொடியன் மாதோ (நற்றிணை – 28)

தோழிதலைவனுக்கு மார்புதலைக் கொண்ட மான் ,ழை மகளிர்
                தலைவி தலைவனுடன் ஊடியிருந்தபோது நான் யாரையும் அறியேன் என மறுக்க தோழி பரத்தையருடன் சேர்ந்ததை நானறிவேன் என்றாள். நீ வரும் தெருவிலே, நின்னை நோக்கி உன் மார்பை நமக்கு உரிமையெனப் பற்றிக் கொண்டவரான பரத்தையர் பலரும் காத்திருந்தனர். அதை அறிவேன் என்றாள். தலைவனின் தவறுகளைச் சுட்டிக் காட்டுபவனாகத் தோழியின் பேச்சு அமைவதைக் காணமுடிகின்றது.

                                ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கிநின்
                                மார்புதலைக் கொண்ட மாண்,ழை மகளிர்
                                கவல் ஏமுற்ற வெய்துவீழ் (நற்றிணை. 30)

தோழிதலைவனுக்கு மரக்கலம் கவிழ்தலும் பலகையைப் பற்றுதலும் போல

                பெருங்காற்று வீசிச் சுற்றுதலால் துன்புற்றக் காலத்தில் கடலிலே மரக்கலம் கவிழ, அதனால் துன்புற்று கலங்கி கரையேற பற்றிக் கொண்ட பலகையைப் போலும், நின்னை பரத்தையர்கள் தழுவிக்கொள்ள ,ழுத்தனர். ,தனை நானும் அறிவேன். என்று தலைவன் பரத்தையரிடம் கொண்ட தொடர்பைக் கூறுவதையும், கடலில் காற்று வீசுவதால் உண்டாகும் கலம் கவிழ்தலுமான செய்திகளைக் கூறி தலைவனுக்குப் புரிய வைக்கும் ஆற்றலுடன் தோழி விளங்குவதைக் காண முடிகின்றது.

                                கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன்வீழ்வு
                                பலர்கொள் பலகை போல
                                வாங்க வாங்கநின்று ஊங்குஅஞர் நிலையே (நற்றிணை – 30)

தோழிதலைவி கண்ணன் - பலராமனைக் கூறும் பாங்கு

                தோழி, தலைவியை நோக்கி மாயவனைப் போன்ற கருமையான மலைப்பக்கத்திலே, அவனுக்கு முன்னவரான வெண்ணிற பலராமனைப் போன்றதான வெள்ளருவியானது இழிந்து கொண்டிருக்கும் என்பாள். தலைவிக்கு கருத்து கூறும்போது கண்ணனையும், பலராமனையும், அவர்களின் உருவ நிறத்தையும் கூறுவதைக் காணலாம்.

                                மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
                                வாலியோன் அன்ன வயங்குவென் அருவி (நற்றிணை – 32)

பெரியோர் நட்பு செய்த பின்பே

                தோழி, தலைவிக்கு தலைவனின நட்பு நல்லது என்று கூறுவள். அதனை புரிய வைப்பதற்காக சில கருத்துக்களை கூறுவள். நீயே நேரில் காணவேண்டும். மேலும், நின் அன்புடைய ஆயத்தார் கலந்து உசாவி அறிய வேண்டும். அறிவுத் தெளிவினை அறிந்த பின்னரே நானும் அவனைப் பற்றிக் கூறல் வேண்டும். அவனது நிலையை மறுத்துக் கூற முடியாது. அறிவுசான்ற பெரியாரை நாடிச்சென்று நட்பு செய்து அவர்பால் ஆய்ந்து ஒன்றைத் தெளிய வேண்டும்.